இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் அவர் அக்டோபர் மாதம் இநதியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு உடற்தகுதியை தயாராக வைத்திருக்க முயற்சிக்கிறேன் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.