வி.பி.சிங் பற்றியும் அவரது தியாக வாழ்க்கை பற்றியும் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஜமின் குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை கிடைத்தாலும் காந்தி இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்காக பாடுபட்டவர் வி.பி.சிங்.ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டியவர் வி.பி.சிங். வி.பி.சிங்குக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசின் கடமையாக கருதுகிறோம்.பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். பிரதமராக வி.பி.சிங் பதவி வகித்தது 11 மாதம்தான், ஆனால் அவர் செய்த சாதனை மகத்தானது.
11 மாத ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் வி.பி.சிங். வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதை தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். இதை கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்க வேண்டும். .வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது.,”இவ்வாறு பேசினார்.