Tuesday, September 17, 2024
Home » தபால் துறையில் 44,228 கிராமின் தக் சேவாக்ஸ்

தபால் துறையில் 44,228 கிராமின் தக் சேவாக்ஸ்

by Porselvi

பணி: கிராமின் தக் சேவாக்ஸ், இப் பணியின் கீழ் 3 வகையான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
i) Branch Post Masters (BPM): இப் பணியில் சேர குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுமக்களுக்கு தபால்துறை சேவைகளை வழங்குவது, கோப்புகள் மற்றும் ரிக்கார்டுகளை கையாள்வது, தபால் துறையின் கீழ் செயல்படும் Post-Payment Bank பணிகளை மேற்கொள்வது ஆகியன. சம்பளம்: ரூ.12,000-29,380.
ii) Assistant Branch Post Master (ABPM): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்டாம்புகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வது, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சென்று தபால்களை பட்டுவாடா செய்வது, தபால்களை புக்கிங் செய்து, பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை செய்ய வேண்டும்.
சம்பளம்: ரூ.10,000-24.470
iii) Dak Sevak: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால்துறை பணிகளில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவி செய்ய வேண்டும். பிளஸ் 2 வில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக படித்தவர்கள் தனியாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. சம்பளம்: ரூ.10,000-24,470.

வயது: 5.8.2024 தேதியின்படி 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக தேர்ந்ெதடுக்கப்படுவர். இதுபற்றிய தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட ஏற்பாடுகளை விண்ணப்பதாரர்கள் செய்திருக்க வேண்டும்.
1. இன்டர்நெட் வசதி, மின் இணைப்புடன் கூடிய கட்டிடத்தை ஜிடிஎஸ்- தபால் அலுவலகத்திற்காக சொந்தமாகவோ, வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும்.
2. கட்டிடம் தரைதளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும்.
3. கட்டிடம் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடமாக இருப்பது விரும்பத்தக்கது. பணிக்கு நியமிக்கப்படுவோர் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. சைக்கிள், டூ வீலர் ஓட்ட தெரிருந்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எஸ்சி/எஸ்டி பிரிவினர்/மாற்றுத்திறனாளிகள்/திருநங்கைகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.விண்ணப்பதாரர்கள் www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.8.2024.

You may also like

Leave a Comment

20 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi