அகமதாபாத்: அகமதாபாத்தில் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியை ஒட்டி, மும்பையில் இருந்து 2 சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் 13ம் தேதி இரவு 10க்கு புறப்பட்டு காலை 6க்கு அகமதாபாத் செல்லும் வகையில் ஒரு ரயிலும், 14ம் தேதி அதிகாலை புறப்பட்டு, போட்டி தொடங்குவதற்குள் அகமதாபாத் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயிலும் இயக்க திட்டமிட்டுள்ளது.