உலகில் எங்கு சென்றாலும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து தான் பேசுவார்கள். இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது. பதற்றத்தை எவ்வாறு சிறப்பாக கையாள்கிறீர்கள், அடிப்படை விஷயங்களில் எவ்வாறு துல்லியமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை வைத்துதான், ஒரு வீரராக உங்களை இயல்பாக வைத்திருக்க உதவும். இந்த போட்டி மிகப்பெரிய அழுத்தம் நிறைந்ததாகும். பதற்றமின்றி தொடர்ந்து அமைதியான மனநிலையில் இருந்து, உங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் எல்லாமே எளிதாகிவிடும். இது தான் சக வீரர்களுக்கு நான் கூறும் அறிவுரை’ என்றார்.