மதுரை: மதுரையில் எம்பி சு.வெங்கடேசன், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கூட்டமைப்பான ‘இந்தியா’ ஊழல்வாதிகள் நிறைந்தது என பிரதமர் மோடி கூறுவது அவரின் பயத்தை காட்டுகிறது. அந்த பயத்தை நான் ரசிக்கிறேன். மோடிக்கு இந்தியர்கள் தான் எதிரிகள். ஏனென்றால், மோடி இந்தியாவின் எதிரி. இந்திய ஒற்றுமையின் எதிரி. இந்திய பன்மைத்துவத்தின் எதிரி பாஜ. இந்திய மதச்சார்பின்மையின் எதிரி இந்துத்துவா. இந்தியாவை கண்டு மோடி அலறுவதையும், பயப்படுவதையும் நாங்கள் ரசிக்கிறோம்’’ என்றார்.