எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நடைபெற்று வந்த வர்த்தகமும் நின்று விட்டது. 2019 ஆகஸ்ட் 5ம் தேதி அரசியல் சட்டம் 370 வது பிரிவை இந்திய நாடாளுமன்றம் ரத்து செய்ததை அடுத்து,இந்தியா உடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்து விட்டது. இந்த முடிவினால், அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதுகிறோம். ஜம்மு காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்னைகளிலும் ஆக்கப்பூர்வமான, தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு இந்தியாவிடம் தான் உள்ளது’’ என்றார்.