ஆனால், இந்தியா கூட்டணி உடையவில்லை, உயர்ந்து வருகிறது. நான் உறுதியாக சொல்கிறேன் இனி எந்த காலத்திலும் டெல்லியில் பாஜ தலை தூக்காது. தேர்தலுக்கு முன்பு சொல்லக்கூடாத வார்த்தைகள் எல்லாம் சொல்லி வருவதன் மூலம் அவர்களுக்கே ஒரு பயம் வந்துவிட்டது. ஒன்றியத்திலே ஆளுங்கட்சியாக இருப்பவர்கள், மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தால் அதை எதிர்ப்பார்களே தவிர, வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருக்க மாட்டார்கள்.
ஆனால், தற்போதுள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சரியாக நிதியை வழங்குவதில்லை. ஒரு தொகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அணைக்கட்டு தொகுதியை எம்எல்ஏ நந்தகுமார் வைத்துள்ளார். 2வது முறையாக இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று அந்த அளவிற்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.