பெங்களூரு: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, பெயர்களைத்தான் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே தெரிவித்துள்ளார். இந்தியா என்ற செல்வதற்குப் பதில் பாரத் என்ற சொல்லை பயன்படுத்தும் பாஜக அரசு பற்றி பிரியங் கார்கே விமர்சனம் செய்துள்ளார். நாட்டின் பெயர் இந்தியில் பாரத்; ஆங்கிலத்தில் இந்தியா; அவ்வளவுதான் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.