இந்தியா-ஆஸி. தொடர் மதிப்பு மிக்க ஒன்றாக மாறி விட்டது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக அங்கு ஆடிய 2 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இந்த முறை அதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. இதுபற்றி இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: “ஆரம்பத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களுக்கு மிகவும் தீவிரம் இருந்தது.

ஆனால் நாங்கள் தொடர்ந்து அவர்களது மண்ணில் வைத்து 2 டெஸ்ட் தொடர்களை வென்ற பிறகு போட்டி மரியாதைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் டெஸ்ட் அணியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இரண்டு முறை அவர்களது மண்ணில் வைத்து வென்ற காரணத்தினால், இது மரியாதை மிக்க ஒன்றாக மதிப்பு மிக்க ஒன்றாக மாறி இருக்கிறது” என்றார்.

 

Related posts

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ.7,425 கோடி மட்டுமே: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு