சுதந்திர தினத்தையொட்டி தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி அனைத்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது என்று கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், இனி தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதனை, பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். தபால் நிலையங்களுக்கு செல்லாமல், https:/www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து வீட்டில் இருந்தபடியே தேசியக்கொடியை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வரும் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் அனைத்து தபால் நிலையங்களிலும் 2 ரூபாய்க்கு மத்திய, மாநில அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில், தங்கள் பணியாளர்களுக்கு வழங்க போதுமான அளவுக்கு மொத்தமாக தபால் நிலையங்களில் தேசியக்கொடியை வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்