ஒரு சுயநல நபரிடம், பதவி வெறி, துரோக சிந்தனை உள்ளவரிடம் அதிமுக இன்று மாட்டி கொண்டிருக்கும்போது அந்த கட்சியில் நாங்கள் இணைவோம் என கேட்கிற கேள்வியே தவறு. தூங்குவதுபோல் நடிப்பவர்கள், சுயநலத்தில் இருப்பவர், பதவி வெறி பிடித்தவர், பணத்திமிரில் இருப்பவர், கட்சியை கபளீகரம் செய்து வைத்திருப்பவர் திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. எங்களுடைய லட்சிய பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.