நீர் வரத்து 25,000 கன அடி ஆக உயர்ந்த நிலையில், உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எண்ணூர், சீமாவரம், மணலி, புதுக்குப்பம், தாமரைப்பாக்கம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.