மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு மற்றும் இருமாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4987 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6479 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 46.57 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 46.55 அடியானது. நீர் இருப்பு 15.70 டிஎம்சி.