அவர்களின் கோரிக்கையினை ஏற்று, 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படும், விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட அதிவேக டீசல் எரியெண்ணெய் அளவினை, படகு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 18,000 லிட்டரில் இருந்து 19,000 லிட்டர் வீதமும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு படகு ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு 4,000 லிட்டரில் இருந்து 4,400 லிட்டர் வீதமும் உயர்த்த வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பினை 2024-2025ம் ஆண்டு முதல் செயல்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 4,500 விசைப்படகு மீனவர்களும் 13,200 நாட்டுப்படகு மீனவர்களும் பயன்பெறுவார்கள்.