சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18,53,115 பேர் பயணித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 90,222 (5.1%) அதிகம்!

ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதே இதற்கு காரணம் என பயணிகள் குற்றசாட்டியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை திரும்புகின்றனர்!

Related posts

உளுந்தூர்பேட்டை சாலை விபத்து: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை