ஒட்டுமொத்தமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுங்கச் சோதனை என்ற பெயரில் பயணிகளை பல மணி நேரம் விமான நிலையத்தில் காக்க வைப்பதே இதற்கு காரணம் என பயணிகள் குற்றசாட்டியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகே உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்கு சென்று விட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை திரும்புகின்றனர்!