5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர். வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தையும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் உயர்த்தி உள்ளனர்.
மேலும் இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இப்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.