டெல்லி: எஸ்.ஜே.சூர்யாவின் மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானவரிக் கணக்கு விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஜூலை 31-க்குள் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்திருக்க வேண்டும். வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை சட்ட நடவடிக்கை எடுத்தது.