வருமானவரிக் கணக்கு விவகாரம்: எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி: எஸ்.ஜே.சூர்யாவின் மனுவுக்கு வருமானவரித்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானவரிக் கணக்கு விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யா மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. 2002-2003ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஜூலை 31-க்குள் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்திருக்க வேண்டும். வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே.சூர்யா மீது வருமானவரித்துறை சட்ட நடவடிக்கை எடுத்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்