தனியார் மருத்துவ குடோனில் வருமான வரித்துறை சோதனை: மாதவரத்தில் பரபரப்பு


திருவொற்றியூர்: மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவ குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாதவரம் நடராஜன் தெருவில் தனியாருக்கு சொந்தமான மணிஷ் குளோபல் இன்கிரீடியென்ட்ஸ் என்ற பெயரில் மருத்துவ மூலப்பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆதிஷ்வர் எக்ஸிபியண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டு நிறுவனத்திலும் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்டவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முழு சோதனைக்கு பிறகுதான் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் கைது வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஜாபர் சாதிக் மனு: இன்று விசாரணை

‘மூன்றில் ஒரு பங்கு’

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது