சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி காலனியில் சுமார் 10 ஆண்டுகள் ஆன மரம் வேரோடு சாய்ந்துவிழுந்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் பிரபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.