பொன்னேரி: மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுண் கதிர் பரிசோதனை கூட்டம் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு சளி பரிசோதனை செய்தவுடன் அதற்கான முடிவு தெரிந்து கொள்ளும் நுண் கதிர் பரிசோதனை கூடத்தை மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி நேற்று திறந்து வைத்தார்.
உடனடியாக நோயாளிகளுக்கு நுண் கதிர் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரன், மாவட்ட நோய் மருத்துவர் அசின், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கர், சமுதாய சுகாதார செவிலியர் ரமாபாய், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலாஜி மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் நோயாளிகள் கலந்து கொண்டனர்.