மனைவியிடம் தகாத உறவால் ஆத்திரம் நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன்

பெங்களூரு: கர்நாடகாவில் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்ட நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன் மற்றும் மற்றொரு நண்பனை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அடுத்த பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவரது நண்பர் மரேஷ். இவர் விஜயின் மனைவியிடம் தகாத உறவில் இருந்து வந்தார். அதனால் ஆத்திரமடைந்த விஜய், தனது நண்பனை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.

இதனால், கடந்த 19ம் தேதி தனது மற்றொரு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து, மாரேஷை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு விஜய் கூறினார். அவரும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்திற்கு வந்தார். அப்போது தனது மற்றொரு நண்பன் ஜானுடன் சேர்ந்து மாரேஷின் கழுத்தை அறுத்து வெளியேறிய ரத்தத்தை விஜய் குடித்தார். இந்த கொடூர செயலை ஜான் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, விஜய்யையும் அவரது நண்பர் ஜானையும் போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரேஷ், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!