இதனால், கடந்த 19ம் தேதி தனது மற்றொரு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து, மாரேஷை குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு விஜய் கூறினார். அவரும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்திற்கு வந்தார். அப்போது தனது மற்றொரு நண்பன் ஜானுடன் சேர்ந்து மாரேஷின் கழுத்தை அறுத்து வெளியேறிய ரத்தத்தை விஜய் குடித்தார். இந்த கொடூர செயலை ஜான் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, விஜய்யையும் அவரது நண்பர் ஜானையும் போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாரேஷ், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.