தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆலமயநாயக்கன்பட்டியில் தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததில் 11-ம் வகுப்பு மாணவன் காயமடைந்தார். ஆசிரியர் முருகேசன் மூங்கில் பிரம்பால் அடித்ததில் மாணவன் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.