அதற்காக பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அலுவலகத்தை அவர் தொடர்பு கொண்டார். அவர்களிடம் இருந்து ஒப்புதல் உத்தரவு வராததால், டெல்லி விமான கட்டுப்பாட்டு அலுவலகத்தை லுஃப்தான்சா விமானி தொடர்பு கொண்டார். டெல்லி விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கினர். அடுத்த சில நிமிடங்களில் லுஃப்தான்சா விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தகராறு செய்து கொண்ட ஜோடியில், கணவரை மட்டும் விமான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். அவர் டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.