பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று பணமாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சவுதி இளவரசரிடம் இருந்து குறைந்த விலையில் நகை வாங்கி ஆதாயமடைந்ததாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு வந்தது. அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.