இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: கானை விடுவிக்க கோரி ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பிரம்மாண்ட பேரணி

இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பிடிஐ கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கானுக்கு மேலும் சில வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு