சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பிடிஐ கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கானுக்கு மேலும் சில வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர்.