இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதனை கேட்டு அதிர்ச்சியில் வெளியில் வந்த பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில், அவர்களுக்கு கை, கால்கள் முறிந்தது. 2 பேரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் நேற்று திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.