போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை என தீர்ப்பு 2வது மாடியில் இருந்து குதித்து 2குற்றவாளிகள் தற்கொலை முயற்சி: திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு

திருச்சி: போக்சோ வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை கேட்ட அதிர்ச்சியில் குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் வெள்ளி திருமுற்றத்தை சேர்ந்தவர்கள் பசுபதி (22), வரதராஜன் (22), திருப்பதி (24). நண்பர்களான 3 பேரும், கடந்த 16.8.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதனை கேட்டு அதிர்ச்சியில் வெளியில் வந்த பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில், அவர்களுக்கு கை, கால்கள் முறிந்தது. 2 பேரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் நேற்று திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!