மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி(52), மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்தும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் நிர்மலாதேவி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையின் விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.