இம்பாலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூருக்கு சென்று நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருந்ததால் சாலை மார்க்கமாக செல்ல வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர்.