டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 மாணவர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி செய்வதற்கு மூளையாக செயல்பட்ட நரேஷ் பிஷ்னோய் என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத வந்த சஞ்சு யாதவ் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.