இதுகுறித்த புகார்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு சென்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது. ஆனால் இறுதி வரையில் தேர்தல் ஆணையம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேப்போன்று தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் சிக்கலோ அல்லது குளறுபடியோ ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.