சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக, தியாகி இம்மானுவேல் சேகரனார் மகள் பிரபா ராணி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ர.தமிழரசி, சண்முகையா, செ.ஸ்டாலின் குமார், செ.முருகேசன். க.சிவகாமசுந்தரி, ராஜா ஈஸ்வரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அ.அசோகன், மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான முருகவேல்ராஜன், தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் பாலன், பாலு, செல்வகுமார், பூமிநாதன், சுரேஷ், மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், அய்யப்பன், சிவக்குமார், எம்.ஆர்.சங்கர் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.