Monday, July 1, 2024
Home » திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

by Kalaivani Saravanan

சென்னை : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் உடல் நலக்குறைவுக் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருப்பவர் மா.சுப்பிரமணியன். அவர், இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு சென்னை, சைதாப்பேட்டையில் தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை உடனடியாக கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்துக் கண்காணித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi