சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய குஜராத் ஏஜென்ட்டுகளுக்கு ரூ.80 லட்சம் பேரம்

அகமதாபாத்: நிகரகுவாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக குஜராத் பயணிகள் 66 பேர் உள்ளூர் ஏஜென்ட்டுகளுக்கு ரூ.80லட்சம் பேரம் பேசியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா நோக்கி கடந்த மாதம் 21ம் தேதி தனி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 260 இந்தியர்கள் உட்பட 303 பயணிகள் இருந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே இருக்கும் வத்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம், 4 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி இந்த விமானம் மும்பை வந்தது. இதில் இருந்தவர்களில் 66பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள்.

இது குறித்து மாநில சிஐடி குற்றம் மற்றும் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் காரத் கூறுகையில், ‘‘நிகரகுவா விமானத்தில் இருந்தவர்களில் 66 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 8 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். இவர்களில் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய உதவுவதற்காக குடியேற்ற ஏஜென்ட்டுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் 80லட்சம் வரை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை