Friday, September 27, 2024
Home » சட்ட விரோதமாக விற்பனையான கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சட்ட விரோதமாக விற்பனையான கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்ததாகவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் மனுவை திரும்பப் பெற்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் கோயில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல் அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டன. இது சம்பந்தமாக அறநிலையத்துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோயில் சொத்துகளை மீட்க வேண்டும். இதில் பேராசை பிடித்த சிலரின் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi