சட்டவிரோதமாக குடோனில் பதுக்கிய ₹34.41 லட்சம் பட்டாசு பறிமுதல்: உரிமையாளர், மேலாளர் கைது

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே குடோனில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.34.41 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோனுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெம்பக்கோட்டை-சிவகாசி சாலையில் மடத்துப்பட்டியில் காக்கிவாடான்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தான குடோனில், சட்டவிரோதமாக அதிகளவில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 1147 பண்டல் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.34 லட்சத்து 41 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குடோன் உரிமையாளர் கிரிதரன், மேலாளர் முருகேசன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை