இந்நிலையில் இத்தாலி சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிஷி சுனக், “சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும். சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகளின் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே இருக்கும். இதற்கு தீர்வு காண சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.