இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் போதைப்பொருள் வழக்கி ஜாபர்சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை என்றும், அதன் பின்னர் சிறைமாற்ற உத்தரவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போதைப்பொருள் வழக்கில் ஜாமின் பெற்று வெளிவர இருந்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் அளித்துள்ள சிறைமாற்ற உத்தரவும் காலாவதியாகிவிட்டதாகவும், அந்த காலவதியான உத்தரவு அடிப்படையில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்தது செல்லாது எனவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜாபர் சாதிக் மனுவுக்கு பதிலளிக்கும் படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.