அதன்படி, போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 25 காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த புலனாய்வு குழுவானது சென்னையில் அதிகளவில் விபத்துகள் நடக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று எதனால் இந்த இடத்தில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, வாகன ஓட்டுநர்களிடம் ஆலோசனை நடத்துவது, தொடர் விபத்துகள் ஏற்படும் இடத்தில் உள்ள சாலையின் நிலை போன்றவற்றை நேரில் ெசன்று விசாரணை செய்யும்.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை ஐஐடி சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்தின் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவால் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியின் போது, ‘ரூட் கேஸ் அனாலிசிஸ் மேட்ரிக்சை’ பயன்படுத்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.