டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.க்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவது ஆர்டிஐ மூலம் அம்பலமனதாக வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஐஐடி ஆசிரியர் பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது அவசியமாகும். ஐஐடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது ஐஐடி கவுன்சிலின் பொறுப்பாகும் என வில்சன் எம்.பி. கூறியுள்ளார்.