இந்நிலையில், நேற்று அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர், இடுகாடு வழங்கிய இடத்தில் ஒரு பகுதி தனக்கு சொந்தமென கூறி அரசு அதிகாரிகளிடம் எந்தவித அறிவிப்புமின்றி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடுகாடு மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சித்தாமூர் – செய்யூர் செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ததோடு, அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.