மதுரை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிலைகளை பாதுகாக்க இரவு பகலாக காவல்துறையினர் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது; இதெல்லாம் தேவையா என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்?. திருச்செந்தூரில் 17 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.