சென்னை: நீதிமன்ற உத்தரவுகள், அரசின் அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருப்பதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்களின் கோரிக்கை மனு எந்த காரணமும் இன்றி நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பட்டா கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது