மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு தண்ணீர் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. தண்ணீர் வழங்க கோரி மனு அளித்து பல மாதங்களாகியும் தண்ணீர் வழங்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்துள்ளது.