குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு 25 ஆண்டுகளாக தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி நியமனம் வழங்கவில்லை என்றும், இதனால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 20-ந் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக்கூறி இன்றைய தினம் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.