மதுரை: மாணவன் கடத்தல் வழக்கில் தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி மனைவியின் உடல் மதுரை விமான நிலையம் வந்தது. மாணவன் கடத்தலில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத் ஆட்சியர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். அதிகாரி மனைவி சூர்யா உடல் விளாத்திகுளத்திற்கு கொண்டு செல்வதற்காக குஜராத்தில் இருந்து மதுரை வந்தது.