சென்னை: கேரள தொழிலாளர் நலத்துறை ஆணையாளராக இருந்த கே.வாசுகிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கே.வாசுகி 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு பெற்றார். கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர், விவசாயத்துறை இயக்குனர், தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது இவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை செயலாளர் கூடுதல் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.