மேலும் டெல்லி குற்றப்பிரிவு போலீசில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப் பிரிவுகளில் மோசடி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பல்வேறு புகார்களை அடுத்து பூஜா ஹெட்கரின் பயிற்சியை ரத்து
செய்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது யுபிஎஸ்சி. இந்த நிலையில், புகார்கள் உறுதியானதை அடுத்து பூஜா ஹெட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம். இனிமேல் போட்டித் தேர்வுகளில் பூஜா பங்கேற்கவும் நிரந்தரத் தடை விதித்து ஒன்றிய அரக பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.