இந்நிலையில் இவர்களுக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பி.சி.கே.ஜி. அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த தேர்வு நடந்தது. ேதர்வு மையங்களுக்கு தேர்வர்கள் முன்னதாகவே வந்திருந்தனர். கடும் சோதனைக்கு பிறகே அவர்கள் தேர்வுக் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை பொறுத்தவரை, மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. 2ம் நாளான இன்று காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வு நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் (பொது அறிவு4) தேர்வு நடக்கிறது. அதன் பிறகு வருகிற 28ம் தேதி காலையில் இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. கடைசி நாளான 29ம் தேதி காலையில் விருப்பப் பாடம் முதல்தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப் பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.